சென்னை: மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கான இலச்சினை வெளியிடப்பட்டது.
மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டுக்கான இலச்சினையை சென்னையில் அதிமுக தலைமை அலுவலத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார்.
உடன் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், மூத்த நிர்வாகிகள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் இருந்தனர்.