6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேல்பாதி திரௌபதி கோயில் விவகாரம்: கோட்டாட்சியர் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி அருள்மிகு ஸ்ரீதா்மராஜா திரெளபதி அம்மன் திருக்கோயில் வழிபாடு தொடர்பாக, ஒரு பிரிவினரிடம் வருவாய்க் கோட்டாட்சியர் அ.கு.பிரவீணாகுமாரி வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினார்.

News image
Updated On :7 ஜூலை 2023, 6:44 am

DIN

 
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி அருள்மிகு ஸ்ரீதா்மராஜா திரெளபதி அம்மன் திருக்கோயில் வழிபாடு தொடர்பாக, ஒரு பிரிவினரிடம் வருவாய்க் கோட்டாட்சியர் அ.கு.பிரவீணாகுமாரி வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினார்.

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீதா்மராஜா திரௌபதி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வது தொடா்பாக, இருவேறு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட பிரச்னை தொடா்பான பேச்சுவாா்த்தையில் சுமுகத் தீா்வு எட்டப்படாததால், கடந்த ஜூன் மாதம் 7 ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

பிரச்னைக்குள்ளான திரௌபதி அம்மன் கோயில் இருக்கும் இடம் தங்களுக்கு சொந்தமானது என இருசமூக மக்களும் கூறியதால்  கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருத்தரப்பினரிடையேயும் அப்போதைய வருவாய்க் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தினார். 

இந்த விசாரணையின் போதும் இருத்தரப்பிலும் சுமூக முடிவு எட்டப்படாததால் மீண்டும் மறு விசாரணை நடத்தப்படும் என்றும் அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் வருவாய்க் கோட்டாட்சியர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய வருவாய்க் கோட்டாட்சியராக அ.கு பிரவீணா குமாரி பொறுப்பேற்றார். 

இதைத் தொடர்ந்து, திரெளபதி அம்மன் கோயில் விவகாரம் தொடர்பாக 2 ஆம் கட்ட விசாரணை இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 7) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இருதரப்பினரிடையேயும் தனித்தனியாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள வருவாய்க் கோட்டாட்சியர் பிரவீணா குமாரி, முதல்கட்டமாக "அ" தரப்பைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்களான 5 பேர் மட்டும் கோயில் நிலம் தொடர்பான உரிய ஆவணங்களுடன் 7 ஆம் தேதி காலை 11 மணிக்கு விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வ விளக்கத்தை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது சம்மந்தப்பட்ட 5 பேரும் ஆஜராகினர். இவர்களிடம் கோட்டாட்சியர் அ.கு. பிரவீணாகுமாரி விசாரணையை மேற்கொண்டார். இதில் வட்டாட்சியர் வேல்முருகன் மற்றும் அலுவலர்கள், காவல்துறையினர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.