ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

விளையாட்டுத் துறைக்கு முக்கியமான மாதம் 2023 ஆகஸ்ட்!

ஆசிய கோப்பை ஹாக்கி - 2023 ஆகஸ்ட் 3 முதல் 11 வரை 18 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெறவுள்ளது.

கோப்புப் படம்

Published On :

தமிழக விளையாட்டுத் துறைக்கு வரும் ஆகஸ்ட் மாதம் முக்கியமானதான அமையவுள்ளது. 

ஆசிய கோப்பை ஹாக்கி - 2023 ஆகஸ்ட் 3 முதல் 11 வரை 18 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெறவுள்ளது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னையில் நடைபெறும் முதல் சர்வதேச ஹாக்கிப் போட்டி இது என்பது சிறப்பு வாய்ந்தது.

ஆகஸ்ட் 14 முதல் 20 வரை மகாபலிபுரத்தில் உலக சர்ஃபிங் லீக் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் சர்வதேச சர்ஃபிங் நிகழ்வு என்பது சிறப்பு வாய்ந்தது.

இந்த விளையாட்டுக்காக மாநில அரசு சார்பில் ரூ.2.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் இன்று (ஜூலை 12) பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதன்முறையாக, பாரா-விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், ஆறு மாவட்ட விளையாட்டு அரங்கங்களில் பாராஸ்போர்ட்ஸ் அரங்கை அமைக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

மைதான வசதிகள் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மினி-ஸ்டேடியங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், 2023-24 பட்ஜெட்டில் சென்னை மேம்பாட்டிற்காக அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளில் அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரத்தை உருவாக்குவதற்கான உள்கட்டமைப்பு திட்டத்தை அறிவித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.