வார இறுதியில் சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு... இன்றும், நாளையும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வார இறுதியில் சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு... இன்றும், நாளையும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாட்டில் வார இறுதி நாட்களில் பயணிகளின் வசதிக்காக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 
Published on

சென்னை: தமிழ்நாட்டில் வார இறுதி நாட்களில் பயணிகளின் வசதிக்காக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 

சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு பயணிகள் சென்றுவருவதற்கு வசதியாக வார இறுதி விடுமுறை நாட்களில் இன்றும், நாளை (ஜூலை 15 மற்றும் 16) தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக  600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து 300 பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com