காமராஜர் பிறந்தநாளில் மாணவர்களுக்கு பேனா வழங்கிய தூய்மைப் பணியாளர்!
காமராஜர் பிறந்தநாளான இன்று சங்ககிரியில் தூய்மைப் பணியாளர் ஒருவர் சாலையில் சென்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பேனா வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காமராஜர் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பேனா வழங்கும் தூய்மைப் பணியாளர் விஷ்ணுபிரியா.








