/

மாணவர்களுக்கு உதவும் நடிகர் விஜய்: ஆளுநர் தமிழிசை பாராட்டு

மாணவர்களுக்கு உதவும் நடிகர் விஜய்க்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

News image

புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநருர் தமிழிசை சௌந்தரராஜன்

Updated On :16 ஜூலை 2023, 4:01 pm IST


புதுச்சேரி: மாணவர்களுக்கு உதவும் நடிகர் விஜய்க்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு அரசியல் செய்யுங்கள் என காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, பேச்சு உரிமை  என்பது அனைவருக்கும் உண்டு. நான் எவ்வளவு பேச வேண்டும் என காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் முடிவு செய்ய முடியாது. அவர் சொல்வதை அவரது கட்சிக்காரர்களே கேட்க மாட்டார்கள். நான் எனக்கு விருப்பமானதை சொல்வேன். கேட்டால் கேட்கட்டும், கேட்காமல் போனால் போகட்டும் என்றார்.

மேலும் மாணவர்களுக்கு நடிகர் விஜய் உதவி செய்வதை பாராட்டுகிறீர்களா? என்ற கேள்விக்கு, இதை அரசியலாக பார்க்கவில்லை. படிப்பதற்கு யார் உதவி செய்தாலும் அதை நான் பாராட்டுவேன். நடிப்பவர்கள் கூட படிப்பவர்களுக்கு படிப்பை சொல்லிக் கொடுத்தால் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற முடியும் என நினைக்கிறார்கள். சமுதாயத்தில் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்பதை அவர்கள்  உணர்ந்திருப்பதை நான் பாராட்டுகிறான்.

எதிர்க்கட்சியாக இருந்தாலும் எதிர் கொள்கையில் உள்ளவர்கள் என யாராக இருந்தாலும் படிப்புக்கு உதவி செய்தால் பாராட்டுவேன். அதில் உள்ள உள்நோக்கம் இல்லை என தமிழிசை தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.