சென்னையில் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில், கலந்தாய்வுக் கூட்டம் இன்று (ஜூலை 22) நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் சென்னை பெருநகரப் போக்குவரத்து நெரிசலை கையாளுதல் தொடர்பாக நடைபெற்ற இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் துறை செயலாளர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் சென்னை பெருநகர சாலைகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பருவ மழைக்காலம் ஆரம்பிக்கும் முன் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.