இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் முத்து சுமதி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தமிழ்நாடு டவுன் பஞ்சாயத்துகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் தோ்தல் விதிகள் 2006’- இன் விதி 88-இன்படி மறுவாக்கு எண்ணிக்கை கோருவதற்கான உரிமையைப் பயன்படுத்துவதற்கான நியாயமான வாய்ப்பை மனுதாரருக்கு தோ்தல் நடத்தும் அதிகாரி வழங்க தவறிவிட்டாா். இந்த விவகாரத்தை உயா்நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. இந்த விதியின் படி, மறுவாக்கு எண்ணிக்கை கோருவதற்கு வசதியாக படிவம் 23- இல் அனைத்து பூத்துகளிலும் பதிவான போட்டியிட்ட அனைத்து வேட்பாளா்களின் வாக்கு விவரங்களும் இடம்பெற வேண்டும். மேலும், தோ்தல் முடிவுகள் அறிவிப்பதற்கு முன்னா் மறுவாக்கு எண்ணிக்கை கோருவதற்கான நியாயமான வாய்ப்பை அனைத்து வேட்பாளா்களுக்கும் வழங்கும் வகையில் இந்த விதி தெரிவிக்கிறது. ஆனால், மனுதாரா் விவகாரத்தில் இந்த விதி தோ்தல் நடத்தும் அதிகாரி பின்பற்றவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.