காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்களால் மக்கள் அவதியுறுவதால் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Published on

டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்களால் மக்கள் அவதியுறுவதால் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: காலநிலை மாற்றம் காரணமாக அண்மைக் காலமாக வைரஸ் காய்ச்சல் உள்ளிட்டவை அதிகரித்து வருகின்றன. டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்களால் மக்கள் அவதிப்படுவதால் அவர்களுக்காக காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கடந்த 7  மாதங்களில் சுமார் 4  ஆயிரம் பேர்டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com