காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்
டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்களால் மக்கள் அவதியுறுவதால் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க: மாநில நலனுக்கு எதிரான எந்த செயலிலும் ஈடுபடவில்லை- ஆளுநர் தமிழிசை
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: காலநிலை மாற்றம் காரணமாக அண்மைக் காலமாக வைரஸ் காய்ச்சல் உள்ளிட்டவை அதிகரித்து வருகின்றன. டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்களால் மக்கள் அவதிப்படுவதால் அவர்களுக்காக காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் சுமார் 4 ஆயிரம் பேர்டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.