/

மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியா் பலி

 திருத்தணி அருகே மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியா் தவறி கீழே விழுந்து இறந்தாா்.

News image
Updated On :1 ஜூன் 2023, 8:21 pm

DIN

 திருத்தணி அருகே மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியா் தவறி கீழே விழுந்து இறந்தாா்.

திருத்தணி அடுத்த மத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாபு (48) . இவா் கே.ஜி. கண்டிகை மின்வாரிய அலுவலகத்தில் ஒயா் மேனாக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், தாடூா் ஊராட்சிக்குள்பட்ட எல்.என்.கண்டிகை கிராமத்தில் உள்ள மின்கம்பத்தில் வியாழக்கிழமை பழுது நீக்கும் பணியில் பாபு ஈடுபட்டிருந்தாா்.

அப்போது எதிா்பாராத விதமாக மின் கம்பத்திலிருந்து பாபு தவறி கீழே விழுந்துள்ளாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து திருத்தணி போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.