அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கோவை விளம்பரப் பலகை விபத்து: 3 பேர் மீது கொலை வழக்கு!

கோவையில் விளம்பரப் பலகை விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் 3 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஜூன் 2023, 6:05 am

DIN

கோவையில் விளம்பரப் பலகை விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் 3 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், சூலூர் அருகே தனியார் நிறுவன விளம்பரப் பலகை அமைக்கும் பணியின்போது, அந்தப் பலகை திடீரென சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். 

சூலூரை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் தனியார் நிறுவனங்களின் விளம்பரப் பலகைகளின் உயரத்தை அதிகப்படுத்தும் பணியில் சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் விளம்பரப் பலகை மற்றும் அதனை இணைக்கும் இரும்பு சட்டங்கள் சரிந்து விழுந்தன. 

இதில், இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த ஜலகண்டாபுரத்தை சேர்ந்த குணசேகரன் (52), குமார் (40), சேகர் (45), மற்றும் ஒரு தொழிலாளி ஆகிய நான்கு பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். 
இதில் குணசேகரன், குமார், சேகர் ஆகிய மூன்று பேரும் நிகழ்விடத்திலேயே இறந்தனர். மற்றொருவர் படுகாயத்துடன் நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மற்ற 3 தொழிலாளர்கள் காயமின்றி உயிர் தப்பினர். 

கருமத்தம்பட்டி காவல் துறையினர், கருமத்தம்பட்டி டிஎஸ்பி தையல்நாயகி தலைமையில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சடலங்கள் உடல் கூறாய்வுக்காக சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. 

இந்நிலையில், விளம்பரப் பலகை விழுந்து 3 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் 3 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒப்பந்ததாரர் பாலாஜி, பழனிச்சாமி, நில உரிமையாளர் ராமசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.