இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தீர்வு எப்போது? குடிநீர் குழாய் உடைப்பு: நெடுஞ்சாலையில் வீணாக செல்லும் குடிநீர்!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே குடிநீர் குழாய் உடைந்து நெடுஞ்சாலையில் வீணாக செல்வதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :9 ஜூன் 2023, 4:55 am

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே குடிநீர் குழாய் உடைந்து நெடுஞ்சாலையில் வீணாக செல்வதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம் கோகிலாபுரம் ஊராட்சியில் 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதற்காக முல்லைப் பெரியாற்றில் உறை கிணறு அமைத்து நெடுஞ்சாலை வழியாக குடிநீர் குழாய் கொண்டு செல்கின்றனர்.

அதில் கோகிலாபுரம் ஊராட்சி அலுவலகம் முன் நெடுஞ்சாலைக்கு கீழே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் நாள்தோறும் வெளியேறி சாலையில் வீணாக செல்கிறது. 

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், கோடை காலத்தில் குடிநீருக்காக மக்கள் திண்டாடும் நிலையில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக வீணாக செல்கிறது. குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை நெடுஞ்சாலை துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நெடுஞ்சாலையின் கீழே செல்லும் குழாய் உடைவதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்து இதற்கு நிரந்தர தீர்வு காண நெடுஞ்சாலைத் துறை, குடிநீர் வடிகால் வாரியம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.