அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திருநந்திபுர விண்ணகரம் ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி!

நாதன்கோயில் என்ற ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற்றது.

News image
Updated On :12 ஜூன் 2023, 8:01 am

DIN

நாதன்கோயில் என்ற ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றான் செண்பக வள்ளி சமேத ஜெகந்நாதப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். 108 திவ்ய தேசங்களில் 21வது தலமும், சோழ நாட்டு திருப்பதிகள் நாற்பதில் நடுநாயகமான தலமுமாக உள்ளது.

இத்தகைய பெருமை பெற்ற வைணவ தலத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு நாள்தோறும் காலை - மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. மேலும் திருக்கல்யாணமும், கட்டு தேரோட்டம் நடைபெற்றது. 

வைகாசி பிரம்மோற்சவ நிறைவு நாளான செண்பகவல்லி தாயார் சமேதராய் ஜெகந்நாதப் பெருமாள் சிறப்பு பட்டாடை, விசேஷ மலர் அலங்காரத்துடன் மங்கல வாத்தியங்கள் முழங்க, திருக்கோயில் கொடிமரம் அருகே எழுந்தருளினார். அங்கு முதலில் பால ஜெகநாத சுவாமிக்கும் தேன், பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், சந்தனம், என பலவிதமான பொருட்களை கொண்டு விசேஷ திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகளுக்குப் பிறகு, பட்டாட்சாரியாகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித காவரியாற்று நீர் நிரப்பிய அண்டாவில், பால ஜெகநாத சுவாமியை பட்டர் மும்முறை முங்கி எடுக்க, வைகாசி பிரம்மோற்சவ தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. 

இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர் ஸர்வதர் திருமஞ்சனம் ஸப்தாவரணம், புஷ்ப யாகத்துடன் இவ்வாண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.