திருப்பூர் மாவட்டத்தில் 620 பள்ளிகள் திறப்பு
திருப்பூர் மாவட்டத்தில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் இயங்கும் 620 பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.


திருப்பூர் மாவட்டத்தில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் இயங்கும் 620 பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
தமிழகத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் செயல்படும் பள்ளிகள் திங்கள்கிழமையும், 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையில் செயல்படும் பள்ளிகள் வரும் புதன்கிழமை முதல் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பின்படி, திருப்பூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் என மொத்தம் 620 பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதில், திருப்பூர் மாநகரில் உள்ள ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்சி.அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் மாணவ, மாணவியர் உற்சாகமாக பள்ளிக்குச் சென்றனர்.
இந்த மாணவர்களை பள்ளி நிர்வாகம் சார்பில் மிட்டாய், இனிப்பு கொடுத்து வரவேற்கப்பட்டது. முன்னதாக மாவட்ட கல்வித்துறை உத்தரவின்பேரில் பள்ளிகளில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டதுடன், வகுப்பறைகள், சமையலறைகள், கழிவறைகள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...