எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்கத்தில் உள்ளார்: ஓமந்தூரார் மருத்துவமனை

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மயக்க நிலையில் இருப்பதாக ஓமந்தூரார் மருத்துவமனையின் அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

News image
ஓமந்தூரார் மருத்துவமனை
Updated On :14 ஜூன் 2023, 6:02 am

DIN

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மயக்க நிலையில் இருப்பதாக ஓமந்தூரார் மருத்துவமனையின் அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  எதிராக 17 மணிநேரத்துக்கும் மேலாக அவரது வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத் துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது அறையில் இருந்து 3 பைகளில் இருந்து ஆவணங்களை அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்றனர்.

17 மணி நேர சோதனைக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நெஞ்சு வலிப்பதாக கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட இசிஜி நிலையாக இல்லை என்றும், சுயநினைவின்றி காணப்படுவதாகவும் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சந்தித்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலைக் குறித்து வெளியான தகவல்:

“அமைச்சர் செந்தில் பாலாஜியின் இதயத்துடிப்பு, ஆக்சிஜன் சமநிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. சீரான இதயத்துடிப்பு இல்லாத பட்சத்தில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ரத்த அழுத்தம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது சீராக உள்ளது. செந்தில் பாலாஜி தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருக்கிறார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று காலை 11 மணியளவில் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசோதிக்க எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வரவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.