சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கலைஞர் கோட்ட திறப்பு விழா: நிதீஷ் குமார் வருகை ரத்து

திருவாரூரில் கலைஞர் கோட்ட திறப்பு விழாவையொட்டி தமிழ்நாடு வரவிருந்த பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :20 ஜூன் 2023, 6:42 am

DIN

திருவாரூரில் கலைஞர் கோட்ட திறப்பு விழாவையொட்டி தமிழ்நாடு வரவிருந்த பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

உடல்நலக்குறைவு காரணமாக அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்குப் பதிலாக துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கலந்துகொள்வார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் திறந்துவைப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

திருவாரூரை அடுத்த காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ.12 கோடி மதிப்பில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தில் இரண்டு திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் மற்றும் கலைஞரின் முழு உருவ சிலை போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மிக பிரம்மாண்டமாக திருவாரூர் தேர் போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகிறது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிகார் முதல்வர் நிதீஷ்குமார், கலைஞர் கோட்டத்தை திறந்துவைக்க திட்டமிடப்பட்டிருந்தது. முத்துவேலர் நூலகத்தை பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி திறந்துவைப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது. 

தற்போது நிதீஷ் குமார் வருகை ரத்தானதால் கோட்டத்தை யார் திறந்துவைப்பார்கள் என திமுக விரைவில் தகவல் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.