காஞ்சிபுரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் இடியுடன் மழை!

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இரவு நேரத்தில் பெய்த மழையால் காஞ்சிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில்  குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வானிலை மையம் அறிவிப்பின் படி, கடந்த 2 நாள்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பெய்து வந்தது.

இந்த நிலையில் திடீரென இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

காஞ்சிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் திடீரென கருமேங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

கோடை வெப்பம் அதிக அளவில் இருந்த நிலையில் இரு நாள்களாக பெய்த மழை கோடை வெப்பம் தணிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் பெய்த மழையால் காஞ்சிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில்  குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com