வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஆனைகட்டியில் யானைகள் தாக்கி ஒரே நாளில் இரண்டு பேர் பலி!

கோவை அருகே உள்ள ஆனைகட்டியில் காட்டு யானைகள் தாக்கியதில் ஒரே நாளில் இரண்டு பேர் பலியான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2023, 7:02 am

DIN

கோவை அருகே உள்ள ஆனைகட்டியில் காட்டு யானைகள் தாக்கியதில் ஒரே நாளில் இரண்டு பேர் பலியான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சின்ன தடாகத்தை அடுத்துள்ள ஆனைகட்டி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. இவை  உணவு மற்றும் குடிநீர் தேடி இரவு நேரங்களில் அவ்வப்போது ஊருக்குள் புகுவது வழக்கம்.

இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி அடிவாரத்தில் மாங்கரை கிராமத்தில் உள்ள ராமச்சந்திரன் என்பவரது தோட்டத்திற்குள் ஒற்றை யானை ஒன்று புகுந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கோவை நகர வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து அதனை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அது  மாங்கரையிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அப்போது அங்கு வசிக்கும் தனியார் பார்மசி நிறுவன ஊழியரான மகேஷ் குமாரும்(38) இந்த யானையை விரட்ட முற்பட்டார். அப்போது இருட்டில் மறைந்திருந்த யானை இவரை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வனத்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதிகாலை 5 மணி அளவில் ஆனைகட்டி மலை மேல் அடர்ந்த வனப்பகுதி ஒட்டி உள்ள துவைப்பதி கிராமத்தைச் சார்ந்த மணி என்பவருடைய மகன் கூலித் தொழிலாளியான மருதாச்சலம்(67) இங்குள்ள ஆவின் பால் கம்பெனி வளாகத்திற்கு அருகில் இயற்கை உபாதைக்காகச் சென்றுள்ளார். அப்போது எதிரில் வந்த ஒற்றை யானை இவரை தாக்கியது. இதில் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கோவை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் அதன் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடாகம் போலீசாரும் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.