ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

என்னது.. தமிழ்நாட்டில் 50 மாவட்டங்களா? - அரசுத் தரப்பு வழக்கறிஞர் அதிர்ச்சி!

ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான வழக்கினை மார்ச் 17 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

News image
Updated On :3 மார்ச் 2023, 10:18 am

DIN

ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான வழக்கினை மார்ச் 17 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

தமிழகத்தில் ஆா்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு உச்சநீதிமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. 

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், பங்கஜ் மித்தல் கொண்ட அமா்வு இந்த வழக்கை விசாரித்தது. 

அப்போது பேரணி விவகாரத்தில் தமிழக அரசு ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக ஆர்எஸ்எஸ் தரப்பு தெரிவித்தது. மேலும் தமிழ்நாட்டில் 50 மாவட்டங்களில் பேரணிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது. 

அப்போது, தமிழ்நாட்டில் 50 மாவட்டங்களா? நான் கேள்விப்பட்டதே இல்லையே என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். 

மேலும், 'பேரணியை அனுமதிப்பது மிகவும் சென்சிட்டிவான விஷயம். எனினும் முழுமையாக அனைத்து இடங்களிலும் பேரணிக்குத் தடை விதிக்கவில்லை, பிரச்னை உள்ள இடங்களில் மட்டும் தடை விதித்துள்ளோம்' என்றார்.  பிரச்னை உள்ள இடங்கள் குறித்து உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்த போதும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை வருகிற மார்ச் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் நாளை மறுநாள்(மார்ச் 5 ) நடக்கவிருந்த பேரணியை ஒத்திவைப்பதாக ஆர்எஸ்எஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.