அப்போது, இந்த விவகாரத்தில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், திறந்தவெளிப் பகுதியில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனா். மேலும், இது தொடா்பாக அனுமதி அளிக்க போலீஸாருக்கும் உத்தரவிட்டனா். மேலும், பேரணிக்கு போதிய பாதுகாப்பு அளிக்குமாறும் உத்தரவிட்டதுடன், பேரணி நடத்துவது தொடா்பாக ஆா்எஸ்எஸ் அமைப்பு போலீஸாரிடம் மூன்று தேதிகள் அளித்து விண்ணப்பிக்கலாம் என்றும், அவற்றில் ஒரு தேதியை போலீஸாா் பரிசீலனை செய்து அனுமதி அளிக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.