விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தனியார் பேருந்து முடிவை கைவிடக் கோரி 9 தொழிற்சங்கங்கள் முதல்வருக்கு கடிதம்

சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கும் முடிவை கைவிடக் கோரி தொமுச உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்புகள் சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

News image
Updated On :7 மார்ச் 2023, 7:55 am

சென்னை: சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கும் முடிவை கைவிடக் கோரி தொமுச உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்புகள் சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கும் முடிவுக்கு தொமுச உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது குறித்து தொமுச உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் முதல்வருக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில், ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்கும் முடிவைப் பெற வேண்டும். ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்பப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கக் கூடாது. தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்த போதுதான் பேருந்துகள் அரசுடைமையாக்கப்பட்டன என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில், தொமுச, சிஐடியூ, ஏடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூட்டாக கையெழுத்திட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.