சென்னை செளகார்பேட்டையில் உள்ள வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
வட இந்தியாவின் மிக முக்கியப் பண்டிகையான ஹோலி இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடு முழுவதும் உள்ள வட மாநிலத்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் வண்ணம் பூசி ஹோலியை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் வசிக்கும் சென்னை செளகார்பேட்டையில் இன்று காலைமுதல் ஹோலி பண்டிகை கலைகட்டியுள்ளது.
ஒருவருக்கு ஒருவர் வண்ணம் பூசியும், ஆடல் பாடலுடனும் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.