/

புதுச்சேரியை மிரட்டும் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல்: முகக்சவசம் அணிய எச்சரிக்கை!

புதுச்சேரியில் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் வேகமாக அதிகரித்துவரும் வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

News image

கோப்புப்படம்

Updated On :11 மார்ச் 2023, 10:27 am IST

புதுச்சேரியில் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் வேகமாக அதிகரித்துவரும் வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நாடு முழுவதும் அண்மைக்காலமாக எச்3என்2 இன்ஃப்ளூயன்ஸா வகை வைரஸ் தொற்று பரவி ஏராளமானோர் காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாளுக்குநாள் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகின்றன. இதுகுறித்து தேவையின்றி கவலையடைய வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் முகக்சவசம் அணிய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கூட்டம் நிறைந்த பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.