புதுச்சேரியில் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் வேகமாக அதிகரித்துவரும் வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் அண்மைக்காலமாக எச்3என்2 இன்ஃப்ளூயன்ஸா வகை வைரஸ் தொற்று பரவி ஏராளமானோர் காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளுக்குநாள் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகின்றன. இதுகுறித்து தேவையின்றி கவலையடைய வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் முகக்சவசம் அணிய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கூட்டம் நிறைந்த பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.