/

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வை முன்கூட்டியே  நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :7 பிப்ரவரி 2024, 6:45 am

DIN

புதுச்சேரியில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை மார்ச்  26-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், தமிழத்தில் அதற்கான அவசியம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வை முன்கூட்டியே  நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது இன்புளுயன்சா ஏ வைரஸின் துணை வைரசான இந்த வைரஸ் ஹெச்3என்2 என அழைக்கப்படுகிறது.

இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைதான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது.

வைரஸ் காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதால் புதுச்சேரி, காரைக்காலில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை மார்ச் 16 முதல் 26-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வைரஸ் காய்ச்சல் பரவல், கோடை வெப்பம் உள்ளிட்ட காரணங்களால் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.