குறைதீர்க்கும் கூட்டம்: மாவட்ட ஆட்சியர்  வராததால்  விவசாயிகள் போராட்டம் 

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர்  வராததால்  விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறைதீர்க்கும் கூட்டம்: மாவட்ட ஆட்சியர்  வராததால்  விவசாயிகள் போராட்டம் 
Published on
Updated on
1 min read

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர்  வராததால்  விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி , வேளாண்மை துறை இணை இயக்குனர் சரஸ்வதி , மண்டல பதிவாளர் முத்துகுமார் ஆகியோர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை கூட்டம் தொடங்கியது.

இதில் கலந்து கொண்ட விவசாய சங்க நிர்வாகிகள் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கடந்த இரண்டு மாதங்களாக வராததால் விவசாயிகள் குறைகள் முழுமையாக தீர்க்கப்படுவதில்லை என்றும், உரிய பதிலும் கிடைப்பதில்லை என்று தெரிவித்தனர்.

இதனால் மாவட்ட ஆட்சியர் வந்தால் மட்டுமே  கூட்டம் நடத்த வேண்டும் என முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின் மாவட்ட ஆட்சியர் வந்தவுடன் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். 

ஆனால் மாவட்ட ஆட்சியர் வராததால் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com