ஈரோட்டில் 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது

ஈரோடு அருகே வாகன சோதனையில் 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்  செய்யப்பட்டது. இது தொடா்பாக காவல் துறையினர் இன்று இருவரை கைது செய்தனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஈரோடு: ஈரோடு அருகே வாகன சோதனையில் 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்  செய்யப்பட்டது. இது தொடா்பாக காவல் துறையினர் இருவரை கைது செய்தனர்.

சென்னிமலை, ஈங்கூர் ரயில்வே நிலைய சாலை அருகே வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, வாகனத்தில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்தில் இருந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணையில், இங்குள்ள ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து அரிசியை சேகரித்து, வட இந்திய தொழிலாளர்களுக்கு பிரீமியம் விலைக்கு விற்க திட்டமிட்டதை இருவரும் ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com