கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நாளை நீட் தேர்வு: தமிழ்நாட்டில் 1.50 லட்சம் பேர் எழுதுகிறார்கள்!

நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் 1.50 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். 

News image
Updated On :6 மே 2023, 10:40 am

DIN

சென்னை: நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் 1.50 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். 

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வை தேசிய தோ்வு முகமை(என்டிஏ) நடத்துகிறது.

அதன்படி, நிகழாண்டு நீட் தோ்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டு கடந்த 3 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த தோ்வை தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.50 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனர்.  இவர்களில் அரசு பள்ளி மாணவர்கள் 14 ஆயிரம் பேர். இந்த தேர்வை தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம். 

தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெறும் மையங்களில் அதிகாரிகள் இன்று தீவிரமாக ஆய்வு செய்தனர். அதிகாலை முதலே மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.