மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு: கண்ணாடிகள் சேதம்

மைசூருவில் இருந்து சென்னை சென்ற வந்தே பாரத் அதிவிரைவு ரயில் மீது அரக்கோணம் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் கல் வீசி தாக்கியதில் ரயில் பெட்டி  கண்ணாடிகள் சேதமடைந்தன.

News image

கோப்புப்படம்

Updated On :7 மே 2023, 6:59 am

மைசூருவில் இருந்து சென்னை சென்ற வந்தே பாரத் அதிவிரைவு ரயில் மீது அரக்கோணம் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் கல் வீசி தாக்கியதில் ரயில் பெட்டி  கண்ணாடிகள் சேதமடைந்தன. பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சென்னைக்கு செல்லும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சனிக்கிழமை மாலை காட்பாடி மற்றும் அரக்கோணம் இடையே மகேந்திவாடி - அன்வர்திகான் பேட்டை ரயில் நிலையங்களுங்கிடையே மாலை 6 மணி அளவில் சென்றபோது அடையாளம் தெரியாத சிலர் ரயில் பெட்டி மீது கல் வீசினர். 

இதில் சி6 பெட்டியில் 75 மற்றும் 76 இருக்கைகளுக்கு அருகில் இருந்த கண்ணாடி சேதமடைந்தது. ஏதும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து வந்தே பாரத் அதிவிரைவு ரயிலின தலைமை ஓட்டுநர் சென்னை ரயில்வே போக்குவரத்து கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளித்தார். 

மேலும் தலைமை ஓட்டுநரின் புகாரை பெற்ற அரக்கோணம் ரயில்வே பாதுகாப்புப்படை காவல் நிலையத்தினர், இது குறித்து வழக்குப் பதிவு செய்து வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.