சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நாளைமுதல் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளைமுதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :8 மே 2023, 8:34 am

DIN

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளைமுதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளை காலை 11 முதல் 13 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகலுக்கு ரூ.275யும், மறுகூட்டலுக்கு ரூ.205யும், உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரு.300 கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகளின் தேர்வுகள் திங்கள்கிழமை(மே 8) வெளியானது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,51,303 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 8,36, 593 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களது தேர்வு முடிவுகள் இன்று திங்கள்கிழமை வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.