அடுத்தடுத்து 5 மாநாடுகளை நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டுள்ள நிலையில், அதில் பங்கேற்க டிடிவி தினகரனை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, விழுப்புரம், சேலம், மதுரை, நெல்லையில் மாநாடுகளை நடத்த ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இபிஎஸ்-க்கு எதிராக வழக்குகளை தொடர்ந்துள்ள ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவர்களை அணி திரட்ட களமிறங்கியுள்ளார். மாநாடுகளை பங்கேற்க தினகரனுக்கு அழைப்பு விடுக்கும் ஓபிஎஸ், சசிகலாவையும் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்துக்கு இரவு 7 மணியளவில் நேரில் சென்ற ஓபிஎஸ்ஸை டிடிவி தினகரன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
டிடிவி தினகரனுக்கு பூங்கொடுத்து கொடுத்து தனது மகிழ்ச்சியை ஓபிஎஸ் பகிர்ந்தார். இதனைத் தொடர்ந்து அவர்கள் கலந்துரையாடினர். ஓபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனும் சென்றிருந்தார்.