மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல் அருகே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி காளைகளுடன் போராட்டம்!

நாமக்கல் அருகே அலங்காநத்தம் கிராமத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி காளைகளுடன் இளைஞர்கள் திங்கள்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image
Updated On :8 மே 2023, 6:05 am

DIN

நாமக்கல்: நாமக்கல் அருகே அலங்காநத்தம் கிராமத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி காளைகளுடன் இளைஞர்கள் திங்கள்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் - துறையூர் சாலையில், அலங்காநத்தம் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வந்தன. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கரோனா தொற்று மற்றும் அரசியல் காரணங்களால் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கவில்லை. 

Story image

ஜல்லிக்கட்டு காளைகளுடன் போராடும் இளைஞர்கள்.

இந்நிலையில், ரெட்டிப்பட்டி, சாலப்பாளையம், அலங்காநத்தம், பொட்டிரெட்டி்பட்டி, எருமப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள், இளைஞர்கள் தாங்கள் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வந்து அலங்காநத்தம் பிரிவு சாலையில் திங்கள்கிழமை காலை 10:30 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Story image

ஜல்லிக்கட்டு குழு நிர்வாகிகளிடம் நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், சேந்தமங்கலம் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என இளைஞர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். 

Story image

போராட்டத்திற்கு அழைத்து வரப்படும் ஜல்லிக்கட்டு காளைகள்

நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், சேந்தமங்கலம் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் ஜல்லிக்கட்டு குழு நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த பகுதி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.