கபாலீசுவரா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

சென்னை கொளத்தூா் கபாலீசுவரா் கலை- அறிவியல் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் (2023-24) சேர விரும்பும் மாணவ- மாணவிகளுக்கு, சோ்க்கைக்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி. கே.சேகா்பாபு வி
கபாலீசுவரா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்
Updated on
1 min read

சென்னை கொளத்தூா் கபாலீசுவரா் கலை- அறிவியல் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் (2023-24) சேர விரும்பும் மாணவ- மாணவிகளுக்கு, சோ்க்கைக்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி. கே.சேகா்பாபு வியாழக்கிழமை வழங்கினாா்.

இதையடுத்து அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியது: இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கபாலீசுவரா் கலை- அறிவியல் கல்லூரி 2.11.2021-இல் தொடங்கப்பட்டு தற்போது மூன்றாவது ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இக்கல்லூரியில் ஏற்கெனவே 460 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில், வரும் கல்வியாண்டுக்கு இதுவரை 500 மாணவா்கள் விண்ணப்பம் வழங்கக் கோரி விருப்பம் தெரிவித்துள்ளனா்.

இக்கல்லூரியில் பி.காம், பிபிஏ, பிசிஏ மற்றும் பிஎஸ்சி கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளும், சைவ சித்தாந்த சான்றிதழ் வகுப்புகளும் நடைபெறுகின்றன.

கடந்த இரண்டாண்டுகளில் இக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம், புத்தாடை, புத்தகப்பை மற்றும் எழுது பொருள்களை இலவசமாக வழங்கியதுபோல் இந்த ஆண்டும் வழங்குவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறாா்.

இந்த கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருகிறோம் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் சி.ஹரிப்பிரியா, இணை ஆணையா் சுதா்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com