ஹூண்டாய் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 
ஹூண்டாய் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ரூ.20,000 கோடி முதலீட்டில், தொழிற்சாலை நவீனமயமாக்கல், நவீன வகை கார்கள் உருவாக்குதல், மின்வாகன மின்கலன் தொகுப்பு, மின்வாகன மின்னேற்று நிலையங்கள் அமைத்தல் ஆகிய திட்டங்களுக்கான வசதிகளை செய்து தருவது குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஒப்பந்தம் கையெழுத்தாகும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும் தற்போதைய நிதியமைச்சருமான தங்கம் தென்னரசு கலந்துகொண்டார். அதுபோல தொழில்துறை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா பங்கேற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com