அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

டாஸ்மாக்கில் ரூ.2,000 நோட்டுகளை பெறக்கூடாதா? - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

அரசு டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை டாஸ்மாக் ஊழியர்கள் பெறக் கூடாது என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. 

News image
அமைச்சர் செந்தில் பாலாஜி
Updated On :6 பிப்ரவரி 2024, 12:58 pm

DIN


சென்னை: அரசு டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை டாஸ்மாக் ஊழியர்கள் பெறக் கூடாது என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. 

ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை அறிவித்தது.

தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை வரும் 23 ஆம் தேதி முதல் செப்டம்பா் 30 ஆம் தேதி வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம்  என்றும் ஆா்பிஐ தெரிவித்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து அரசு டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை ஊழியர்கள் பெறக் கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளதாகவும், மீறி ரூ.2,000 நோட்டுகளை பெற்றால், அதற்கு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளரே பொறுப்பு என்று டாஸ்மாக் நிர்வாக கூறியுள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், அரசு டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை டாஸ்மாக் ஊழியர்கள் பெறக் கூடாது என்று எந்தவித சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை. அது முற்றிலும் தவறான செய்தி என மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில், முற்றிலும் தவறான செய்தி... இதுபோல எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.