கம்பம் : தேனி மாவட்டம் சுருளி அருவி சாலையில் 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை தனது பயணத்தை அரிசி கொம்பன் தொடர்ந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கேரள மாநிலம் குமுளியிலிருந்து தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பிற்கு வந்த அரிசி கொம்பன் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள விளை நிலங்கள் வழியாக சனிக்கிழமை கம்பம் வந்தது.
நடராஜன் மண்டபம், துணை மின்நிலையம் வழியாக வந்த அரிசி கொம்பனை பொதுமக்களின் கூச்சலால் ஊருக்குள் மிரண்டு ஓடியது. நந்தகோபாலன்கோயில் வழியாக வந்து இரண்டு தெருக்களை கடந்து மீண்டும் துணை மின்நிலையம் வழியாக இரவு நடராஜன் மண்டபம் பின்புறம் சென்றது.
அன்று இரவு 9 மணிக்கு ஆங்கூர்பாளையம் வழியாக சுருளிப்பட்டி ஊராட்சி பகுதிக்கு வந்தது. அங்குள்ள தெருக்களை சுற்றி வந்தது. அதை பார்த்த மக்கள் அலறினர்.
யானையை பின்தொடர்ந்தது வந்த வனத் துறையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு திசையை திருப்பியதால் சுருளிமலை அடிவாரம் யானை கஜம் பகுதிக்கு விளை நிலங்கள் வழியாக சென்றது. யானை கஜம் செல்லும் சாலையை போலீஸார் அடைத்தனர். தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் சுருளிப்பட்டிக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
இந்த நிலையில் யானையை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


