கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் 4ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.
மின்சாரத் துறை அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜியின் ஆதரவாளா்களின் வீடு, அலுவலகங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருமான வரித் துறையினா் தொடா்ந்து சோதனை நடத்தி வருகின்றனா்.
இதையும் படிக்க- இன்றும் இறுதிப்போட்டி நடைபெறாவிட்டால் என்ன நடக்கும்? ஹர்ஷா போகலே
அதன் ஒருபகுதியாக கோவையில் கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள திமுக பிரமுகரும், செந்தில்பாலாஜியின் ஆதரவாளருமான செந்தில்காா்த்திகேயன் வீடு மற்றும் அலுவலகத்தில் 4 ஆவது நாளாக இன்றும் சோதனை நீடிக்கிறது.