தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் 5-வது நாளாக சோதனை!

தமிழக பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றது.

News image
Updated On :7 நவம்பர் 2023, 6:13 am

DIN

தமிழக பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றது.

அமைச்சா் எ.வ.வேலு மீது எழுந்த வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு புகாா்களின் அடிப்படையில், வருமானவரித் துறையினா் அவருக்கு சொந்தமான இடங்கள், தொடா்புடைய இடங்கள் ஆகியவற்றில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சோதனை செய்து வருகின்றனா்.

பெரும்பாலான இடங்களில் திங்கள்கிழமை சோதனை நிறைவு பெற்ற நிலையில், சில இடங்களில் மட்டும் சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை கணக்கில் வராத ரூ. 23 கோடி ரொக்கமும், சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், திருவண்ணாமலையில் உள்ள அமைச்சரின் வீடு, அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட சில இடங்களில் 5-வது நாளாக துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் சோதனை தொடர்ந்து வருகின்றது.

இந்த சோதனைகளின் நிறைவில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த பிறகே, வரி ஏய்ப்பு தொடா்பான விவரங்கள் முழுமையாக தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.