டெல்டா மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
டெல்டா மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(செவ்வாய்க்கிழமை) டெல்டா மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதன்படி, விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்காலிலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நவ. 16 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com