தமிழத்தில் கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று(சனிக்கிழமை) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கையையொட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடா்ந்து நீடிக்கிறது. இதன் காரணமாக, சனிக்கிழமை (நவ. 18) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிக்க | ‘அனைத்து மாவட்டங்களுக்கும் 5ஜி’
சனிக்கிழமை காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டின் ஆகிய 3 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.