சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு லண்டனின் கிரீன் ஆப்பிள் விருது கிடைத்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய பிறகு, பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்குவது குறைந்திருக்கிறது.
நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயிலை உபயோகித்து வரும் நிலையில், சென்னை மாநகரின் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ கொண்டு வருவதற்கான பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு லண்டனின் பசுமை அமைப்பு வழங்கும் கிரீன் ஆப்பிள் விருதை வென்றுள்ளது.
கிரீன் ஆப்பிள் விருதின் கார்பன் குறைப்பு பிரிவில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது.