ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!

ராமேசுவரம் அடுத்த தனுஷ்கோடி அருகே தமிழ்நாட்டு கடலோர எல்லைப் பகுதிக்குள், அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த 5 மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர்.

News image
Updated On :22 நவம்பர் 2023, 4:57 am

DIN

ராமேசுவரம்: தனுஷ்கோடி அருகே இலங்கை மீனவா்கள் 5 பேரை இந்தியக் கடலோரக் காவல் படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்கள் வந்த படகு பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அருகே இந்தியக் கடலோரக் காவல் படையினா் வழக்கமான ரோந்துப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது, தனுஷ்கோடி மூன்றாம் மணல் தீடையில் படகு ஒன்று இருப்பதைக் கண்டு அங்கு சென்றனா். விசாரணையில், அந்தப் படகில் இருந்தவா்கள் இலங்கையைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, இலங்கை மீனவா்கள் 5 பேரையும், அவா்களது படகையும் இந்தியக் கடலோரக் காவல் படையினா் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு கொண்டு வந்து, தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, அவா்களை மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இவா்கள் தலைமன்னாா் பியா் பகுதியைச் சோ்ந்த அப்துல் ஹமீது (40), அகமது ரக்ஷன் (27), அருள் பிரசாத் (25), அஜித் (25), விமல் (26) என்பதும், பலத்த காற்று வீசியதால் இந்திய எல்லைக்குள் வந்துவிட்டதாகவும் தெரிவித்தனா்.

இதையடுத்து, இலங்கை மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக போலீஸாா் வழக்குப் பதிந்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.