அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இன்று(வெள்ளிக்கிழமை) திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கூறியிருந்தது.
இதையும் படிக்க | இன்று 3 மாவட்டங்களில் கனமழை! நவ. 27ல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இன்று மாலை 4 மணி வரை) 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், கரூர், திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், புதுக்கோட்டை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 'நேர்மையானவர் என்பதால் ராகுலுக்கு பயமில்லை' - சுப்ரியா சுலே