சென்னை: டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில், அந்தமானில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அந்தமானில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு, டிசம்பர் முதல் வாரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் அடுத்த இரண்டு நாள்களுக்கு லேசான மழை பெய்யும் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு தமிழகத்தைக் கடந்ததும் இரண்டு நாள்களுக்கு மழை குறையும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 1 முதல் சென்னை 466.2 மி.மீ. மழையைப் பெற்றுள்ளது.
தீபாவளிக்கு வாங்கிய பட்டாசை வெடிக்க முடியுமா என்ற கலக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மழை கொட்டோ கொட்டென கொட்டித் தீர்த்தது.
ஆனால், வருண பகவானுக்கும் கருணை இருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், சிறு, சாலையோர வியாபாரிகளின் கண்ணீரைத் துடைப்பதற்காக, தீபாவளிக்கு முன்பு இரு நாள்களுக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு சென்றது மழை.
இல்லையேல் பட்டாசுகளை எல்லாம் மழை நீரில் படகு விட்டிருக்கும் நிலை கூட பல இடங்களில் ஏற்பட்டிருக்கும். எப்போதாவது மழை கொட்டிவிட்டுச் செல்லும் சில ஆண்டுகளைப் போல அல்லாமல், இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது முதல் மழைக் காலமாகவே மாறிவிட்டிருந்தது.
இத்தனைக்கும் பெரிய அளவில் காற்றழுத்தத் தாழ்வுகள் உருவாகாமலேயே இத்தனை நாள்கள் நவம்பரில் மழை பெய்திருக்கிறது.
அப்படியிருக்கும் போது, டிசம்பர் மாதம் எப்படியிருக்கப் போகிறது என்று இப்போதே கலங்கத் தொடங்கியிருக்கிறார்கள் மக்கள்.
இந்த நிலையில்தான், டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கத்தாா் எரிவாயு ஆலையில் வெடிவிபத்து: இந்தியர்கள் உள்பட 13 பேர் பலி

சாஸ்திரி பூங்காவில் குப்பை கிடங்கில் தீ விபத்து
உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்: தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவா் உத்தரவு
நடைபாதை அடிப்படை உரிமை!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




