ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோவை நகைக்கடை கொள்ளை: கொள்ளையடித்த நபரின் புகைப்படம் வெளியீடு

கோவை காந்திபுரம் நகைக் கடையில் கொள்ளையடித்த நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பதுடன் 2.7 கிலோ தங்க நகைகள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

News image
விஜய்
Updated On :30 நவம்பர் 2023, 8:57 am

DIN


கோவை காந்திபுரம் நகைக் கடையில் கொள்ளையடித்த நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பதுடன் 2.7 கிலோ தங்க நகைகள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள பிரபல நகைக் கடையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கொள்ளை நடைபெற்றது. கடையின் ஏ.சி. வெண்டிலேட்டரை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா், நகைக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமாா் 200 பவுன் நகைகள், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளாா்.

இந்த கொள்ளை சம்பவம் தொடா்பாக ரத்தினபுரி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளை சம்பவம் பதிவாகியுள்ளது. குற்றவாளி தப்பிச் சென்றது மேலும் சில இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களிலும் பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து குற்றவாளியை கைது செய்வதற்காக 5 தனிப்படைகளை அமைத்து மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். 

இந்த சம்பவம் குற்றவாளி அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும், ஓரிரு நாள்களில் அவா் கைது செய்யப்படுவாா் எனவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்த நிலையில், நகைக் கடையில் கொள்ளையடித்த நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பதுடன் 2.7 கிலோ தங்க நகைகள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

நகைக் கடையில் கொள்ளைில் கைவரிசை காட்டியவன் தருமபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த விஜய் (26) என்று அடையாளம் காணப்பட்டது. அவனை பிடிக்க ஆனைமலையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

ஆனைமலையில் விஜய் நண்பன் சுரேஷ் வீடு மற்றும் அரூரில் உள்ள விஜய் வீட்டில் இருந்து மொத்தம் 2.7 கிலோ தங்க நகைகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.