திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (அக். 1) தொடங்கியது.
மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
ஆலோசனை கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தல் பணிகள், மாவட்ட வாரியாக பணிகள், பூத் கமிட்டி புதுப்பிப்பது, தேர்தலில் திமுக வேட்பாளர்களை எங்கே களமிறக்குவது, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.