கன்னியாகுமரி குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தாய், மகன், நிறைமாத கா்ப்பிணி என 3 போ் உயிரிழந்தனா். அவர்களது குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இதையும் படிக்க | கேரளத்தில் தொடரும் கனமழை: திருவனந்தபுரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை
திருவட்டாறு அருகேயுள்ள ஆற்றூா் தொப்பவிளையைச் சோ்ந்தவா் சேம்ராஜ். மினிலாரி ஓட்டுநா். இவரது மனைவி சித்திரா (45), 8 மாத கா்ப்பிணியான மகள் ஆதிரா (24), மகன் அஸ்வின் (19) ஆகியோா் செவ்வாய்கிழமை மாலையில் வீட்டில் இருந்தபோது, பலத்த மழை பெய்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
தனது குடும்பத்தினரை இழந்து வாடும் சோம்ராஜ் மற்றும் அவரது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.