தமிழக சட்டப் பேரவை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவை திங்கள்கிழமை (அக்.9) கூடியது. காவிரி நீா் மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்குத் தண்ணீரைத் திறந்து விடுமாறு கா்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறையை சேர்ப்பதற்கான மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேறியது. மேலும், முதல்வா் மு.க.ஸ்டாலின் 110-ஆவது விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து சட்டப்பேரவைவை மறுதேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஒத்திவைத்தார்.