கட்டடக் கழிவு: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

கட்டடக் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கட்டடக் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவித்திருப்பதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15  மண்டலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டடக் கழிவுகளை கொட்ட வேண்டும். 

பொது இடங்களில் 1 டன் அளவிற்கு குறைவான கட்டடக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது ரூ. 2000 வரை அபராதமும், அதற்கு மேல் கொட்டுபவர்களுக்கு ரூ. 5,000 என திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும். குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டிடக் கழிவுகளை கொட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களின் விவரம்:

மேலும், ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ. 1,87,88,678 வரை   அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com