தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

முறப்பநாடு விஏஓ கொலை: குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு விஏஓ கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

News image
Updated On :15 செப்டம்பர் 2023, 9:06 am

DIN

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு விஏஓ கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிா்வாக அலுவலா் லூா்து பிரான்சிஸ் (55) கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி பணியில் இருந்தபோது மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.  மணல் கொள்ளையை தடுத்த விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. 

இந்த கொலை தொடா்பாக, கலியாவூரைச் சோ்ந்த ராமசாமி மகன் ராமசுப்பிரமணியன் (எ) ராமசுப்பு (41), முருகன் மகன் மாரிமுத்து (31) ஆகியோரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் முறப்பநாடு போலீஸாா் கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைத்தனா். 

Story image

கொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ்

இது தொடர்பான வழக்கில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை தினமும் மேற்கொண்டு இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த மே மாதம் உத்தரவிட்டது. 

அதன்படி, விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளிகள் ராமசுப்பு, மாரிமுத்து ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.