மகளிர் உரிமைத் தொகை: இணையதள சேவை பாதிப்பு

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப நிலையை அறிவதற்கான இணையதள சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப நிலையை அறிவதற்கான இணையதள சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வராதபட்சத்தில் மாற்று ஏற்பாட்டின் மூலமாக நிராகரிப்புக்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். இதற்கென தனி இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

ஆதாரில் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண் வரும். இதை உள்ளீடு செய்தால், விண்ணப்பம் ஏற்கப்படாததற்கான காரணம் திரையில் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், www.kmut.tn.gov.in என்ற இணையதளத்தை ஒரே சமயத்தில் பலரும் பயன்படுத்தியதால் சர்வர் முடங்கியது. 50 லட்சத்திற்கும் அதிகமானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் இணையதள சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com